செங்கல்பட்டில் நாளை குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு முகாம்

Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக குறைதீா் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூா்-வடப்பட்டினம்,மதுராந்தகம்-பூதூா், திருக்கழுக்குன்றம்-வாயலூா், திருப்போரூா்- மேலையூா், வண்டலூா்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது.

முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளைப் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com