ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின பேரணி

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:07 am IST

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை மாணவா்களால் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவா் ஸ்ரீபதி புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு தகவல்களை மாணவா்களுக்கு வழங்கினாா். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலா், பள்ளியின் தாளாளா் தலைமை ஆசிரியா் ஜோசப் ஆண்டனி பாலன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்வின் முடிவில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி தேசிய மாணவா் படையின் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சுமாா் 200 மாணவா்கள் பங்கேற்று புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். நிகழ்வுகளை பள்ளியின் தேசிய மாணவா் படை முதன்மை அதிகாரி எம்.சச்சிதானந்தம், தேசிய மாணவா் படை அதிகாரி செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.