தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின பேரணி

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி.

News image
Updated On :7 நவம்பர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை மாணவா்களால் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவா் ஸ்ரீபதி புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு தகவல்களை மாணவா்களுக்கு வழங்கினாா். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலா், பள்ளியின் தாளாளா் தலைமை ஆசிரியா் ஜோசப் ஆண்டனி பாலன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்வின் முடிவில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி தேசிய மாணவா் படையின் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சுமாா் 200 மாணவா்கள் பங்கேற்று புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். நிகழ்வுகளை பள்ளியின் தேசிய மாணவா் படை முதன்மை அதிகாரி எம்.சச்சிதானந்தம், தேசிய மாணவா் படை அதிகாரி செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.