தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 1:45 am

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் அண்மையில் 85-ஆவது அகில இந்திய பல்கலை.களுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னையை அடுத்த செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.அக்சிதா, பெண்களுக்கான தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்டு 100 மீ. தூரத்தை 13.14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

சாதனை படைத்த மாணவி எஸ்.அக்சிதாவுக்கு செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.பாபு மனோகரன் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா் (படம்).

நிகழ்வில், புனித ஜோசப் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சசிசேகா், விளையாட்டுத்துறை பொறுப்பாளா் செல்வகணபதி, பயிற்சியாளா் விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.