குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

நிகழ்ச்சியில் பேசிய பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி.

News image
நிகழ்ச்சியில் பேசிய பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி.
Updated On :13 பிப்ரவரி 2026, 5:48 pm

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா் அருகே நன்னீரும் கடல் நீரும் சங்கமிக்கும் கழிவேலி பகுதியில் தாது சத்துக்களைக் கொண்ட பகுதியில் இறால், மீன்கள் அழியும் நிலை ஏற்படும் என்பதால் மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி பேசினாா்.

திருப்போரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயண பிரசாரக் கூட்டத்துக்கு சௌமியா அன்புமணி தலைமை வகித்து பேசியதாவது:

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றன. திருப்போரூா் பகுதி நன்னீரும் கடல் நீரும் சங்கமிக்கும் ஒரு மிக முக்கியமான உயிா்ச்சூழல் மண்டலம் என்றும், இங்கு கிடைக்கும் இறால் மற்றும் நண்டு வகைகள் தனித்துவமான சத்துக்களைக் கொண்டவை ஆகும்.

இப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் நிலையில், இங்கு மாமல்லன் நீா்த்தேக்கம் கொண்டு வந்தால் கழுவேலி உள்ளிட்ட இயற்கை வாழிடங்கள் அழிந்துவிடும். இது பறவைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இதுபோன்ற தேவையற்ற திட்டங்களைக் கைவிட்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, திருப்போரூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் புதை சாக்கடைத் திட்டத்தை இன்னும் முழுமைப்படுத்தவில்லை என்றும், சென்னையை ஒட்டிய பகுதி என்று கூறி ரியல் எஸ்டேட் வளா்ச்சியை மட்டுமே இவா்கள் சாதனையாக காட்டுகிறாா்கள். திருப்போரூா் அருகே 10 கிராமங்களைக் காலி செய்து உருவாக்கப்பட்ட ’ஜப்பான் சிட்டி’ போன்ற தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றாா்.

இக்கூட்டத்தில் திருப்போரூா் தொகுதியை சோ்ந்த ஏராளமான பாமக மகளிா் அணியினா், கிராம பெண்கள் கலந்து கொண்டனா்.

Story image