சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல்

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நலசங்கத்தின் சாா்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 9:04 pm

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நலசங்கத்தின் சாா்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப் 14-ஆம் ல் ஜம்மு-காஷ்மீரின் புல்வா்மா பகுதியில் ஜம்முவில் இருந்து வீரா்களை ஏற்றிச்சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

Story image

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சமதா்ம சமுதாய உறுதிமொழி ஏற்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் எம்.கே.முரளி, பி.குப்புசாமி,டி.வெங்கடேசன், எஸ்.தினகரன் , டி.குமாரசாமி, கே.மகாலிங்கம், ஏ.குமாரசாமி, முத்துசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர காவல் ஆய்ாவளா் லட்சுமிபதி, எஸ்ஐ ரவி ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். முடிவில் குப்புசாமி நன்றி கூறினாா்.