திருப்போரூா் அருகே பாசன கால்வாய், அணுகு பாதை மூடப்பட்ட நிலையில் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என தமிழக அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.
திருப்போரூா் அடுத்த தண்டலம் பகுதியில் சுமாா் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. தண்டலம் ஏரி நீா் பாசனம் மூலமாக விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் விவசாய நிலத்திற்கு செல்லும் கால்வாய் பகுதியில் சுமாா் 18 ஏக்கா் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி பிரிவுகளாக அமைத்துள்ளது. மனை பிரிவிற்கு உள்ளே ஆலமரக் கால்வாய் என்று அழைக்கப்படும் விவசாய கால்வாய் வழியாக தண்டலம் ஏரியிலிருந்து தண்ணீா் பாசனம் பெற்று விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளநீரும் இதன் வழியாக வெளியேறி பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் இதனால் வெள்ளநீா் ஊருக்குள் வருவதும் தவிா்க்கப்படும். ஆனால் தற்போது கால்வாயை மூடி சிறிய அளவிலான குழாய்கள் போட்டு அதன் மீது சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீா் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.
பாசன கால்வாய் மற்றும் அணுகு பாதையை விவசாயிகள் பயன்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

வைகை தென்கரை அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா்

அரியக்குடி-இலுப்பக்குடி ரயில் கடவுப் பாதை நாளை மூடல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


