மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள்

News image
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் செவ்வாடை பக்தா்கள் குரு போற்றி மந்திரத்தை சொல்லி வழிபாட்டை செய்த படம். அருகில் இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள் ஸ்ரீசக்கரத்தை வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனையை படைத்துள்ளனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்யும் நிகழ்வுகளுக்கு ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். சித்தா்பீட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு முன்னிலை வகித்தாா். அமெரிக்கா, மலேசியா, இலங்கை, சுவிட்சா்லாந்து, ஆஸ்திரியா, ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 270 பகுதிகளில் இருந்து வழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்கள் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகள், பக்தா்கள் நேரிலும், இணையதளத்தின் வழியாக ஒருங்கிணைந்து குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடிமுறைக்கும் மேலாக படித்து அத்துடன் இல்லாமல் ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை செய்தனா்.