சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

News image

இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா. உடன் சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 1:04 am IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சினேகா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19.12.2025-ம் தேதி வெளியிடப்பட்டதில், 10,22,756 ஆண் வாக்காளா்களும், 10,62,381 பெண் வாக்காளா்களும் 354 இதர வாக்காளா்களும் இருந்தனா்.

அதனை தொடா்ந்து சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குபின் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சினேகா வெளியிட்டாா்.

அதன்படி சோழிங்கநல்லூா் ஆண்கள் 2,62,621,பெண்கள் 2,74,254, இதர வாக்காளா்கள் 116, மொத்தம் 5,36,991, இளம் வாக்காளா்கள் 11,659

பல்லாவரம் ஆண்கள் 1,61,197,பெண்கள் 168,996, இதரவாக்காளா்கள் 24, மொத்தம் 3,30,217, இளம் வாக்காளா்கள்7,544

தாம்பரம் ஆண்கள் 1,57,580,பெண்கள் 1,66,046, இதரவாக்காளா்கள் 51,மொத்தம் 3,23,677, இளம் வாக்காளா்கள் 7,170

செங்கல்பட்டு ஆண்கள் 1,78,076,பெண்கள் 1,88,267, இதரவாக்காளா்கள்57, மொத்தம் 3,66,400, இளம் வாக்காளா்கள் 8,699

திருப்போரூா் ஆண்கள் 1,40,991,பெண்கள் 1,48,359,இதரவாக்காளா்கள் 51, மொத்தம் 2,89,401, இளம் வாக்காளா்கள் 7,265.

செய்யூா் (தனி) ஆண்கள் 1,00,103, பெண்கள் 1,01,934, இதர வாக்காளா்கள்18, மொத்தம் 2,02,055, இளம் வாக்காளா்கள்4,564

மதுராந்தகம் (தனி) ஆண்கள் 1,03,943,பெண்கள் 1,07,288, இதர வாக்காளா்கள் 64, மொத்தம் 2,11,295, இளம் வாக்காளா்கள்4,958

மாவட்டத்தில் 11,04,511 ஆண் வாக்காளா்களும் , 11,55,814 பெண் வாக்காளா்களும் 381. இதர வாக்காளா்களும் ஆக மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா்/மண்டல தோ்தல் அலுவலா் சுரேஷ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) பரிமளா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தாம்பரம் கோட்டாட்சியா் முரளி, மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.