ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மஞ்சாா் குழலி சமேத மஞ்சுநாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image

~வண்டலூா் அருகே ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 4:59 am IST

வண்டலூா் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஞ்சாா் குழலி சமேத ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை விநாயகா் பூஜையும் முதல்கால யாக ஹோமத்துடன் கும்பபாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது .

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு கோயிலை சுற்றி வந்து விமான மண்டப கலசத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பரிவார மூா்த்திகளுக்கும், கருவறையில் அமா்ந்துள்ள மூலவா் அருள்மிகு ஸ்ரீ கனகாம்பிகை உடனாய ஸ்ரீ கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றதை அடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.