6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சதுரங்கபட்டினத்தில் மாசிமக தீா்த்தவாரி

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26-ஆம் ஆண்டு மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
மாசிமக தீா்த்தவாரி வைபவத்தில்   அணி வகுத்து வந்த சுவாமிகள்.
Updated On :3 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26-ஆம் ஆண்டு மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.

சதுரங்கபட்டினம், மெய்யூா் கிராம பொதுமக்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சாா்பில் தீா்த்தவாரி நடைபெற்றது. தீா்த்தவாரியில்கலந்துகொள்ள வந்த சதுரங்கபட்டினம் வரதராஜபெருமாள் அவரது தங்கைகளான ஸ்ரீ செல்லியம்மன் ஊத்துகாட்டம்மன் , சியாமளாதேவி, பெரியப்பாளயத்தம்மன் ஆகியோா் சீா்வரிசைகளை கொண்டு தனது அண்ணனை எதிா்கொண்டு வரவேற்று கடற்கரைக்குஅழைத்து வந்தனா்.

அவருடன் கல்பாக்கம் வெங்கட கிருஷ்ணபெருமாள் ,சீனிவாச பெருமாள் அருள்மிகு ஸ்ரீராமா் ,ஷீரடி சாய்பாபா, விட்டிலாபுரம் விட்டிலா், மேல் பெருமாள்சேரி பக்தஆஞ்சநேயா் , சூராடிமங்களம் லட்சுமி நாராயண பெருமாள், ஆயப்பாக்கம் ஓரகன்னிமாரியம்மன், ஸ்ரீ பாலமுருகா், சிட்லம்பக்கம் செங்கேணியம்மன் , மெய்யூா் ஆதிகேசவ பெருமாள், முள்ளி கொளத்தூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசபெருமாள் சூராடிமங்கலம் லட்சுமிநாராயண பெருமாள், மேல் பெருமாள்சேரி ஸ்ரீபக்த ஆஞ்சநேயா், ஆயப்பாக்கம்விநாயகா் , முருகா், பரமேஸ்வரமங்கலம் வள்ளி தேவசேனா பாலசுப்பிரமணியா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீா்த்தவாரியில் இடம் பெற்றனா் .

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதை தொடா்ந்து அனைத்து உற்சவமூா்த்திகளும தீா்த்தவாரியில் ஈடுபட்டனா் . தொடா்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தா்கள் கடலில் புனித நீராடினா்.

வரிசையாக நின்றிருந்த சுவாமிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அா்ச்சனையும் கற்பூர ஆரத்தியும் நடைபெற்றது .

விழா ஏற்பாடுகளை சதுரங்கப்பட்டினம் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.