நடப்பாண்டு சரோஜினி நாயுடு பரிசுக்கான மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தி ஹங்கர் புராஜக்ட்' அமைப்பு சார்பில் ஊராட்சி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் குறித்த கட்டுரைகளுக்கு ஆண்டுதோறும் சரோஜினி நாயுடு பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகள் இப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன என ஹங்கர் புராஜக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், ஹிந்தி, இந்திய மொழிகள் என மூன்று பிரிவுகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய கட்டுரைக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். இது தவிர நாளிதழ்கள், பருவ இதழ்களில் ஊராட்சி அமைப்பில் பெண்கள் அளித்து வரும் பங்களிப்பு குறித்து வெளியான மிகச் சிறந்த கட்டுரைக்கு, அதனை எழுதிய செய்தியாளருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.
கட்டுரைகள் "தி ஹங்கர் புராஜக்ட்', 53-ஏ, முதல் தளம், சர்ச் வீதி, தங்கம் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600040 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9840666821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

