வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேர்தலுக்கு மட்டுமே இங்கே வருகிறார்கள்!

திரு.வி.க. நகர் தொகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் குடியிருப்பில் நிலவும் சுகாதாரமற்ற நிலைமைகளால், மலேரியா, அம்மை போன்ற தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 50 பேர் அம்மை நோயாலும், 30 பேர் மலேரியா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :10 ஏப்ரல் 2016, 9:58 pm

திரு.வி.க. நகர் தொகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் குடியிருப்பில் நிலவும் சுகாதாரமற்ற நிலைமைகளால், மலேரியா, அம்மை போன்ற தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 50 பேர் அம்மை நோயாலும், 30 பேர் மலேரியா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குடியிருப்பில் சுமார் 6000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முறையான குடிநீர் வசதியும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வருகின்ற குடிநீர், கழிவு நீருடன் கலந்து மஞ்சள் நிறமாக வருகிறது. கழிவுநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

குடியிருப்பு எங்கிலும் தேங்கியுள்ள குப்பை கூளங்களால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மலேரியாவின் கடுமையான பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் அருந்ததியர் குடியிருப்பு பெண்கள் நலச் சங்கத் தலைவர் எம்.எஸ்.லாவண்யா கூறியதாவது:- தேர்தல் நெருங்கும்போது மட்டும்தான் அரசியல்வாதிகள் இங்கே வருகிறார்கள். கடந்த தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க வந்தார்கள். அதன் பிறகு யாரும் வரவில்லை. குடிநீர் பிரச்னையைத் தீர்க்குமாறு எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தோம். எதையுமே நிறைவேற்றவில்லை. எங்களை அரசியல்வாதிகள் சக மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.

குடிநீர் பிரச்னை, சுகாதாரப் பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி கொடுப்பவருக்கே வாக்களிப்போம் என்றார்.

-அருளினியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.