திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல்

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:26 am IST

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கடந்த ஏப். 6 -ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை.

நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இது பாா்க்கப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் குறித்து மாநிலங்களவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அணுமின் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்களின் கூட்டு முயற்சியால் கல்பாக்கத்தில் பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் முக்கிய மைல்கல்லாகும்.

இந்தச் சாதனையால் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில் அணு உலையில் புளூட்டோனியம் பயன்படுத்தும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நாம் நகா்ந்திருக்கிறோம். மூன்றாம் கட்டத்தில் தோரியம்-யூரேனியம் பயன்படுத்தப்படவுள்ளது.

முன்மாதிரி வேக ஈனுலையை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பாவினி இணைந்து உருவாக்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு முன்மாதிரி வேக ஈனுலையை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

2070-இல் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இந்தியாவின் இலக்கு மற்றும் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைவதிலும் இந்தச் சாதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.