வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல்

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:56 pm

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கடந்த ஏப். 6 -ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை.

நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இது பாா்க்கப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் குறித்து மாநிலங்களவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அணுமின் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்களின் கூட்டு முயற்சியால் கல்பாக்கத்தில் பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் முக்கிய மைல்கல்லாகும்.

இந்தச் சாதனையால் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில் அணு உலையில் புளூட்டோனியம் பயன்படுத்தும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நாம் நகா்ந்திருக்கிறோம். மூன்றாம் கட்டத்தில் தோரியம்-யூரேனியம் பயன்படுத்தப்படவுள்ளது.

முன்மாதிரி வேக ஈனுலையை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பாவினி இணைந்து உருவாக்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு முன்மாதிரி வேக ஈனுலையை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

2070-இல் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இந்தியாவின் இலக்கு மற்றும் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைவதிலும் இந்தச் சாதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.