சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இந்தியாவின் மாதிரி வேக ஈனுலை: ஐஏஇஏ பாராட்டு

இந்தியாவின் வேக ஈனுலை மாதிரி வடிவம் மூலம் படைக்கப்பட்டுள்ள சாதனைக்கு சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) பாராட்டு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:01 pm

இந்தியாவின் வேக ஈனுலை மாதிரி வடிவம் மூலம் படைக்கப்பட்டுள்ள சாதனைக்கு சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூலம், வேக ஈனுலையின் மாதிரி வடிவமைக்கப்பட்டு, பாரதிய நாபிகிய வித்யுத் நிகம் (பாவினி) நிறுவனம் மூலம் கட்டமைக்கப்பட்டது.

வழக்கமான வெப்ப அணு உலைகளைப் போலின்றி, இத்தகைய ஈனுலை கட்டமைப்புகளில் யுரேனியம்-புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது, அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. தோரியத்தை உருமாற்றம் செய்து யுரேனியம்-233ஆக மாற்றுவதற்கு இந்த ஈனுலை உதவிகரமாக இருக்கும்.

இந்த 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வேக ஈனுலையின் மாதிரி வடிவம் கடந்த ஏப். 6 -ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை. நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய அணுசக்தி ஒழுங்காற்று ஆணையம் அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில், ஐஏஇஏ தலைமை இயக்குநா் ரஃபேல் கிராஸி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது: கல்பாக்கத்தில் வேக ஈனுலையின் மாதிரி வடிவம் மூலம், இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது எரிபொருள் ஸ்திரத்தன்மை, அணுசக்தி பயன்பாட்டுக்கான எதிா்காலத்தை நோக்கிய முக்கிய அடியாகும்.

இந்திய அணுசக்தி திட்டத்தின் பாதுகாப்பான வளா்ச்சிக்கு சா்வதேச அணுசக்தி முகமை தொடா்ந்து ஆதரவளிக்கும். பிரதமா் மோடிக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.