சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேசியக் கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:17 am IST

தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் நற்பெயரை அவமதிக்கும் விதமாக பொது இடங்கள், ஏனைய இடங்களில் தேசியக் கொடி அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தல், சிதைத்தல், அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை: இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கலாசார, விளையாட்டுப் போட்டிகளின்போது காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவற்றைத் தரையில் போடக் கூடாது. தேசியக் கொடிக்கான மரியாதையை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.