செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அகில இந்திய அளவில் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு எஸ்டிவி ரூ.118 (சிறப்புக் கட்டண வவுச்சர்) என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதில் அளவில்லாத உள்ளூர், வெளியூர் குரல் அழைப்புகள், தேசிய ரோமிங் வசதியில் ரிங் பேக் டோன், ஒரு ஜி.பி. டேட்டா ஆகியவை 28 நாள்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
குறைந்த அளவே டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியை இச்சலுகை மூலம் பெறமுடியும். பிஎஸ்என்எல் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






