கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On :6 ஏப்ரல் 2018, 3:23 am IST

செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அகில இந்திய அளவில் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு எஸ்டிவி ரூ.118 (சிறப்புக் கட்டண வவுச்சர்) என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதில் அளவில்லாத உள்ளூர், வெளியூர் குரல் அழைப்புகள், தேசிய ரோமிங் வசதியில் ரிங் பேக் டோன், ஒரு ஜி.பி. டேட்டா ஆகியவை 28 நாள்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
குறைந்த அளவே டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியை இச்சலுகை மூலம் பெறமுடியும். பிஎஸ்என்எல் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.