தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி,  உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள்,  சென்னை மகப்பேறு மருத்துவமனைகள்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களில் கடந்த 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை  5 நாள்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், 6 மாதம் முதல்  5 வயது வரையிலான 5,44,604 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது. இது  திட்ட இலக்கில் 95 சதவீதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.