பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி,  உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள்,  சென்னை மகப்பேறு மருத்துவமனைகள்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களில் கடந்த 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை  5 நாள்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், 6 மாதம் முதல்  5 வயது வரையிலான 5,44,604 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது. இது  திட்ட இலக்கில் 95 சதவீதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.