முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம்: நிர்வாகக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இரண்டு வார

Updated On :26 டிசம்பர் 2018, 4:11 am IST


பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்குரைஞர் எஸ்.துரைசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
நாங்கள் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். இந்தக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டு அவரது கண்காணிப்பில் அறக்கட்டளை நிர்வாகம் இயங்கி வருகிறது. தர்ம காரியங்கள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை தற்போது முற்றிலும் வணிகரீதியாக மாறியுள்ளது. அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பச்சையப்பன் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அறக்கட்டளை நிர்வாகமும் அனுமதியளித்துள்ளது.
இதற்காக உயர்நீதிமன்றத்திடம் இருந்து எந்தவிதமான முன்அனுமதியும் பெறவில்லை. அதே போல காலியிடங்கள் கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்கள், கடைகள் கட்டுவதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. இடைக்கால நிர்வாகியும், தணிக்கை அதிகாரிகளும் அறக்கட்டளை நிதிநிலை மோசமாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். மேலும் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பான விதிமுறைகளிலும் தகுந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இந்த மனு தொடர்பாக பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகக்குழு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.