கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

கால்பந்து உலகக் கோப்பையைப் பார்க்க வந்த உயிருள்ள சிலையாகப் புகழ்பெற்ற காங்கோ ரசிகர் குறித்து...

News image

சிலையாக நின்றிருந்த காங்கோ ரசிகர். - படம்: ஏபி

Updated On :24 ஜூன் 2026, 3:54 pm IST

உயிருள்ள சிலையாகப் (living statue) புகழ்பெற்ற காங்கோ ரசிகர் முதல்முறையாக உலகக் கோப்பையை நேரில் பார்க்க அனுமதி கிடைத்தது. முதலில் விசா கிடைக்காமல் இருந்த இவருக்கு தற்போது அனுமதி கிடைத்தது பேசுபொருளாகியுள்ளது.

மிஷேல் கூகா எம்போலடிங்கா (49 வயது) என்ற் இவர் காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருக்கிறார். கால்பந்து போட்டியின்போது அந்த நாட்டின் முதல் பிரதமரின் (பாட்ரிக் லுமும்பா) சிலை பாணியில் 90 நிமிஷமும் அசையாமல் இருந்து பிரபலமானார்.

இந்தக் காரணத்தினால், எம்போலடிங்காவுக்கு ’லுமும்பா வே’ என்ற பட்டப்பெயரையும் காங்கோ கால்பந்து ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியது. முதல் போட்டியில் போர்ச்சுகல் உடன் 1-1 என சமன்படுத்தியது.

இரண்டாவது போட்டியில் கொலம்பியாவுடன் 1-0 என தோல்வியுற்றது. இந்தப் போட்டியைப் பார்க்க லுமும்பா வே அமெரிக்க கால்பந்துத் திடலுக்கு வந்திருந்தார்.

இந்தமுறை மஞ்சள் நிற ஷர்ட், நீல நிற பேண்ட் உடன் சிகப்பு நிற கோட் அணிந்திருந்தார். போட்டி தொடங்கியதும் ஆடாமல் அசையாமல் தனது வலது கையை உயர்த்திப் பிடித்து நின்றார்.

லுமும்பா வே கொலை செய்யப்பட்டதைக் காட்டும் காங்கோ ரசிகர்.

லுமும்பா வே கொலை செய்யப்பட்டதைக் காட்டும் காங்கோ ரசிகர். - படம்: ஏபி

இவரிடம் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க முயன்றபோது உலகக் கோப்பையில் பார்வையிட்டது மகிழ்ச்சி என சிரித்து கடந்துவிட்டார்.

காங்கோ கால்பந்து அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. இதற்காக அந்த நாட்டில் (ஏப்.1) பொது விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலரான பாட்ரிக் லுமும்பா வே பெல்ஜியத்தின் காலனிய ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து 196ல் காங்கோ சுதந்திரம் அடைய உதவினார். பின்னர், முதல் பிரதமராகப் பதவி வகித்தார். இருந்தும் ஓராண்டில் இவர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Congo fan who stands as living statue of independence leader Lumumba makes it to World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.