கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகலின் வெற்றிக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ அணி 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காதது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது) தனது ஆறாவது உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் போட்டியை மறக்கும்படியான செயல்பாட்டை வழங்கியது அவரது ரசிகர்களிடமுமே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியின் 6ஆவது நிமிஷத்திலேயே போர்ச்சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்தார். பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45'+5') காங்கோவின் யோவான் விஸ்ஸா தனது தலையினால் கோல் அற்புதமான கோல் அடித்தார்.
முதல் பாதியில் 1-1 என இருந்த நிலையில், இரண்டாம் பாதி முழுவதும் இதேமாதிரி தொடர்ந்தது. போர்ச்சுகல் அணி எவ்வளவோ முயன்றும் காங்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் அளித்தது.
இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல், அசிஸ்ட் கூட செய்யவில்லை. கோல் அடிக்க 68, 73ஆவது நிமிஷத்தில் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவறவிட்டது பலரிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்பாபே, மெஸ்ஸி, ஹாலண்ட் கோல்கள் அடிக்க ரொனால்டோ அடிக்காதது இணையத்தில் கிண்டலாக மாறியுள்ளது. காங்கோ தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் கோல் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
Summary
Portugal great Ronaldo fails to score in surprising 1-1 draw against Congo at World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











