போலி பாஸ்போர்ட் வழக்கு: இருவர் கைது

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். 
Updated on
1 min read

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். 
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஒரு விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் கலீல் பாட்ஷா, அப்துல் மஜீத் ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானவை எனத் தெரியவந்தது.
விசாரணையில், இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்த த.கண்ணன் (41), அதே பகுதியைச் சேர்ந்த சி.மருதமுத்து (41) என்பதும், இருவரும் சவுதி அரேபியா சென்று திரும்பியதும், போலி பாஸ்போர்ட்டுக்காக கண்ணன், கலீல் பாட்ஷா என்ற பெயரிலும், மருத
முத்து அப்துல்மஜீத் என்ற பெயரிலும் பயணம் செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சென்னை மத்தியக் குற்றப் பிரிவில் ஒப்படைத்தனர். இருவரும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com