சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மக்களின் கருத்தை அறியாமல் தன்னிச்சையாக தமிழக அரசு, சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்றியதைக் கண்டித்து அறப்போர் இயக்கத்தினர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து அந்த இயக்கத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவ.இளங்கோ உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

தொகுதி மறுவரையறையால் மக்களை சிதறடித்துவிடக் கூடாது: சீமான்

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

