சென்னை காசிமேட்டில் இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
காசிமேடு திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் கோவிந்தராஜ் (39). மனைவி லட்சுமி. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தராஜ் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்வது வழக்கம். கடந்த 19-இல் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே, இரும்புக் கம்பியால் லட்சுமியை கோவிந்தராஜ் தாக்கினார். படுகாயமடைந்த லட்சுமி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









