மின்சார ரயிலில் படியில் தொங்கியப்படி சென்ற இரு இளைஞர்கள் பரங்கிமலை ரயில் நிலைய சிமெண்ட் தடுப்பில் மோதி உயிரிழந்தனர். அவர்களை அடையாளம் காண ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியது: சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு மாலை 6.40 மணியளவில் புறப்பட்ட மின்சார ரயிலில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். அந்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இருப்புப் பாதையையொட்டி கிடந்த சிமெண்டால் ஆன தடுப்பு ஒன்றில் படிக்கட்டில் தொங்கிச் சென்ற இளைஞர்கள் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் 18, 20 வயதுடையவர்களாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் பற்றிய அடையாளம் தெரியவில்லை. மாம்பலம் ரயில்வே போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


