மோடிக்கு அவமரியாதை செய்தவர் கைது
சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, காரில் கலைவாணர் அரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து


சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, காரில் கலைவாணர் அரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட தொழிலாளியை அண்ணா சதுக்கம் போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு மானியத்துடன்கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை சென்னைக்கு வருகை தந்தார்.
தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் காரில் கலைவாணர் அரங்கம் நோக்கி புறப்பட்டார். அப்போது அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் திரளானோர் காத்திருந்தனர். அவரது கார் கடற்கரை சாலையை கடந்தபோது, ஜெயலலிதா நினைவிடம் அருகே நின்ற கூலித் தொழிலாளி ஒருவர் பிரதமரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்டார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, பிரதமரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்ட சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழனியை (46) வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...