ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ.66 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.66.7 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :14 மே 2018, 9:21 pm

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.66.7 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: திங்கள்கிழமை மேற்கொண்ட தொடர் சோதனையின்போது, 4 பேர் சவுதி அரேபியா, துபை ஆகிய நாடுகளிலிருந்து ரூ.66.7 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து சென்னை வந்த மஹபுல் ஷேக் (31) என்பவரிடம் இருந்து ரூ. 14.7 லட்சம் மதிப்புள்ள 464 கிராம் தங்கப்பட்டைகளும், துபையிலிருந்து வந்த அஸ்மத் பாஷா (34), முகமது பரூக் (38), நூர் முகமது (47) ஆகிய 3 பேரிடமிருந்து ரூ,30 லட்சம் மதிப்புள்ள 968 கிராம் தங்கக்கட்டிகள், பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பார்சலில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.66.7 லட்சம் மதிப்பிலான தங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.