அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க காவலன் செயலியை பயன்படுத்துமாறு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அண்மையில் Kavalan sos App என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவின்பேரில் இணை ஆணையர் ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செல்லிடப்பேசி செயலியை ஐ-போன், ஆண்ட்ராய்டு ஆகிய இருவகை செல்லிடப்பேசிகளிலும் பயன்படுத்தலாம். காவல்துறையை அவசர தேவைக்கு அழைப்பதற்கு இந்த செயலியில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால் கூட, அதுகுறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துவிடும். மேலும் சம்பந்தப்பட்ட நபர், எங்குள்ளார் என்பது குறித்த தகவலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் உடனடியாக அறிந்துக் கொள்ள முடியும்.
அத்துடன் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த ஒரு நிமிஷத்தில், சம்பந்தப்பட்டவரின் செல்லிடப்பேசியில் உள்ள கேமரா தானாக இயங்கத் தொடங்கி, அங்கு பதிவாகும் காட்சி நேரலையாக கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். இந்த செல்லிடப்பேசி செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் வசதி கொண்டது. இணைய இணைப்பு இல்லாத இடங்களில்கூட இந்த செல்லிடப்பேசி எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக செயல்படும்.
இந்த செல்லிடப்பேசி செயலியை பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த செயலியை அனைத்து தரப்பினரும் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல்! அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


