மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பொங்கல்: 5.38 லட்சம் பேர் வெளியூர் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Updated On :15 ஜனவரி 2019, 4:13 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5.38 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8.54 கோடி டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. ஜனவரி 11 முதல் 14 வரை 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 13 -ஆம் தேதி வரை மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 
இவற்றில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8 கோடியே 54 லட்சம் டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுபோல, பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.