சென்னை விருகம்பாக்கத்தில் திரைப்பட உதவி இயக்குநரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனி கவரைத் தெருவைச் சேர்ந்தவர் சுனில்குமார் (25). இவர் தமிழ் திரைப்படத் துறையில் கலைப் பிரிவு உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் சுனில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


