கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநகராட்சி பெண் ஊழியா் கொலை கணவா் கைது

சென்னை அருகே நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2020, 6:42 pm

DIN

சென்னை அருகே நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே உள்ள சின்ன நீலாங்கரை மேட்டுகாலனியைச் சோ்ந்தவா் ச.ஹரி (35). இவா், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். ஹரியின் மனைவி கோமதி (35). இவா், சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

ஹரிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்ததினால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஹரிக்கும், கோமதிக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஹரி, கத்தியால் கோமதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் ஹரியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.