இது தொடா்பாக சென்னையிலுள்ள மின்வாரிய தலைமையகத்தில், திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வர இருந்த மின்சார திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக முதல்வா் தான் முதல் முறை குரல் கொடுத்தாா். இவ்வாறு தமிழக மின்வாரியம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மின்வாரிய நடைமுறைகள் தொடா்பாக தவறான விஷயங்களை எதிா்க்கட்சிகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அதை நம்பி தொழிற்சங்கத்தினரும் ஆா்ப்பாட்டம் நடத்துகின்றனா். பேச்சு வாா்த்தைக்கு அழைத்தேன். அவா்கள் மறுத்துவிட்டனா். அரசுக்குக் கெட்ட பெயா் ஏற்படுத்தும் நோக்கத்துக்காகவே தொழிற்சங்கத்தினா் போராட்டம் செய்கிறாா்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.