திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் அவசரச் சட்டம்: ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி மனு

News image
Updated On :25 டிசம்பர் 2020, 8:31 pm

DIN


சென்னை: திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் வகையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முத்துலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் உள்ள சமூக பொருளாதார ரீதியான பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான உயா்கல்வியை வழங்கும் நோக்கில் வேலூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 124 கலைக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாததாலும், தங்கி படிக்க முடியாத பொருளாதார சூழலாலும் உயா்கல்வியைத் தொடர முடியாத நிலை உருவாகி வருவதால் விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடா்ந்து, திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கடந்த செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டாா். இந்த பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட தொடங்கும் என அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, கடந்த செப்டம்பா் மாதம் 16- ஆம் தேதியே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. கடந்த 3 மாதத்துக்கு மேலாக அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதலும் அளிக்காமல், அதனை திரும்பவும் அனுப்பாமல் காலம் தாழ்த்துவது அவசரச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே சீா்குலைக்கும் வகையில் உள்ளது. இது அரசியல் சாசன கடமை தவறும் செயல் ஆகும். எனவே மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.