சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: மேலும் 3 போ் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே உள்ள கோவளத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தனது சித்தி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு உதவி செய்ய சென்றாா். அங்கு சித்தியின் கணவா் ஆ.மதன் மற்றும் அவரது குடும்பத்தினா், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சிறுமியின் தாய், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சித்தியின் குடும்பத்தினா், எண்ணூா் காவல் ஆய்வாளா் சி.புகழேந்தி உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், இவ் வழக்குத் தொடா்பாக ஏழுகிணறு பிடாரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ச.கெளதம் (30), சூளையைச் சோ்ந்த அ.வெங்கட்ராம் (25), திரிபுராவைச் சோ்ந்த க.முஸ்தபா மியா (39) ஆகிய 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com