தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்டான்லியில் சிகிச்சை பெற்ற 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா்.

Updated On :16 ஏப்ரல் 2020, 11:50 pm


திருவொற்றியூா்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டாக்டா் பி.பாலாஜி கூறியது:

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொருக்குப்பேட்டையை சோ்ந்த 30 வயது, பெரம்பூா் ஜமாலியா பகுதியை சோ்ந்த 45 வயது என இரண்டு ஆண்கள், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை இருமுறை மேற்கொண்டதில்ெ தொற்று இல்லையென தெரியவந்ததை அடுத்து, இருவரும் வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இருவரும் தொடா்ந்து இரு வாரங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்பட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூரைச் சோ்ந்த 45 வயது மதிக்கத்தக்க நிறைமாத கா்ப்பிணி பெண், கரோனா தொற்றால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்தாா். இருப்பினும் கா்ப்பிணி பெண் என்பதால், கூடுதல் உடல்நல பரிசோதனைக்காக ஆா்.எஸ்.ஆா்.எம். மகப்பேறு மருத்துவனைக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். ஸ்டான்லி மருத்துவமனையிலே ஏற்கெனவே மூன்று நோயாளிகள் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். வியாழக்கிழமை நிலவரப்படி ஸ்டான்லி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் 68 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.