தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்தது குறித்து...

News image

தேர்தல் பணியின் போது நெஞ்சுவலியால் மரணம் அடைந்த வாழப்பாடியைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன். - டிஎன்எஸ்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:47 am

வாழப்பாடி: தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்த சம்பவம், காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அய்யாவு கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (58). குடும்பத்துடன் வசித்து வந்த இவர், மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பணியில் இருந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை மீட்ட சக காவலர்கள் சிகிச்சைக்காக அயோத்தியாப்பட்டணம் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் உயிரிழந்தார். இவரது உடல் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவிற்கு, போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஹரிபிரசாத் என்ற மகனும், சங்கீதப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

Summary

Regarding the death of a Special Sub-Inspector of Police, who was on election security duty, due to chest pain on Thursday night...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.