சேலம்: கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாகிகம்பட்டியில் நடைபெற்ற வாக்குப் பதிவு மையத்தில் மல்லிகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தேர்தல் பாதுகாப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார்,
அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Summary
Special Sub-Inspector of Police on Election Duty Dies Near Gangavalli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாபில் மர்ம நபர்களால் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




