எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

News image

காவல் உதவி ஆய்வாளர் மோகன். - படம்: தினமணி

Updated On :19 மே 2026, 12:53 pm IST

திருப்பூர்: ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ. 200 லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயியை காங்கேயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் வாகன சோதனைக்கு நிறுத்திய திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் என்பவர், வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, முறையான சான்றிதழ் இல்லை என்று கூறி ரூ. 200 லஞ்சம் பெற்றுள்ளார்.

இதனை ஆடு வியாபாரிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Sub-Inspector Mohan was suspended for intercepting a vehicle transporting goats for sale and accepting a bribe of ₹200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.