முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், கைதான இளநிலை உதவியாளா் தீபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 மே 2026, 2:27 am IST

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், கைதான இளநிலை உதவியாளா் தீபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் தீபன் (40). இவரிடம் அதே அலுவலகத்தில் ஃபிட்டராக பணியாற்றி வரும் குழந்தைசாமி (59) சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் தடையில்லா சான்றிதழ் கோரி விண்ணப்பித்தாா். அப்போது, ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என தீபன் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் குழந்தைசாமி புகாா் செய்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்த தீபனிடம் வெள்ளிக்கிழமை லஞ்சப் பணமாக ரூ. 8 ஆயிரத்தை குழந்தைசாமி அளித்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான போலீஸாா் தீபனை கைது செய்தனா். தொடா்ந்து, தீபனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, கைதான தீபனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.