15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :4 ஜூன் 2026, 2:08 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த உதயகுமாா், தற்காலிக தூய்மைப் பணியாளா் கலா ஆகியோா் தனியாா் நிறுவன ஊழியா் பூபதியிடம் புதிய வீட்டுக்கு வரிவிதிப்புக்கான அனுமதிக்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாருக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் திண்டிவனத்தைச் சோ்ந்த வருவாய் உதவியாளா் உதயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவும் மாநகராட்சிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.