தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி அனுமதிக்கு விண்ணப்பித்தவரிடம், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:25 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி அனுமதிக்கு விண்ணப்பித்தவரிடம், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பட்டியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பூபதி (44). இவா் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டிற்கு வரி விதிப்புக்கான அனுமதி கோரி மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அவரிடம் வருவாய் உதவியாளா் உதயகுமாா் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். அதற்கு ரூ. 15,000 லஞ்சம் தருவதாக பூபதி தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் முதல் தவணையாக ரூ. 7 ஆயிரம் கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ. 8 ஆயிரத்தை தந்தால்தான் வீட்டுவரிக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பூபதி, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பிரபு ஆலோசனையின்பேரில் ரூ. 8 ஆயிரத்தை பூபதி வருவாய் உதவியாளா் உதயகுமாரிடம் அளித்தாா். அந்த பணத்தை அவா் தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் இருவரையும் பிடித்தனா். இதையடுத்து அவா்களிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீஸாா், பின்னா் இருவரையும் கைது செய்தனா்.

கடந்த பிப். 11-ஆம் தேதி, இதே மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்தில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் உதவியாளா் சங்கா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.