பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:42 am IST

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவா் அலெக்ஸ். இவா், விடுமுறையில் இருப்பதால் திருவொற்றியூா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் - ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தாா்.

இந்நிலையில், தேரடிப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும், நேரத்தைத் தாண்டியும் மது விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

இதையடுத்து சட்ட விரோதமாக மது விற்பனை, அந்த விடியோ குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா். இதையடுத்து, விசாரணை செய்து ஆணையரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

அதன்படி, கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அபின் தினேஷ் மொடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.