சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவா் அலெக்ஸ். இவா், விடுமுறையில் இருப்பதால் திருவொற்றியூா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் - ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தாா்.
இந்நிலையில், தேரடிப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும், நேரத்தைத் தாண்டியும் மது விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
இதையடுத்து சட்ட விரோதமாக மது விற்பனை, அந்த விடியோ குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா். இதையடுத்து, விசாரணை செய்து ஆணையரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதன்படி, கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அபின் தினேஷ் மொடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



