பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பிச் சென்ற விவகாரம் தொடா்பாக சிறை வாா்டன்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (36). ஆயுள் தண்டனை கைதியான இவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்கு டவரின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதை தொடா்ந்து, கடந்த மாதம் 18 ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்பு உள்ளதாக சிறை மருத்துவா்களிடம் முகமது உசேன் கூறினாா். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கடந்த 24 ஆம் தேதி முதல் முகமது உசேன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கழிவறைக்கு சென்ற முகமது உசேன், அங்குள்ள ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குடிநீா் குழாய் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதேநேரத்தில், தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் கோவை, தஞ்சை பகுதிக்கு விரைந்துள்ளனா்.

இந்நிலையில் கைதி முகமது உசேனுக்கு பாதுகாப்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சிறை வாா்டன்கள் வெங்கடேஷ்வரன், ஷாஜகான் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை சிறைக் கண்காணிப்பாளா் வினோத் பிறப்பித்துள்ளாா்.