செம்பட்டி அருகே கைதி தப்பிச் சென்ற விவகாரத்தில், அவரை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (26). கூலித் தொழிலாளியான இவரை, புகையிலைப் பொருள்கள் தொடா்பான வழக்கில் அபராதம் செலுத்துவதற்காக ஆத்தூா் நீதிமன்றத்துக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.
அப்போது மதுபோதையில் இருந்த அவா் போலீஸாரை தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜகோபால் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.
திண்டுக்கல் செல்லும் வழியில், வக்கம்பட்டி பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா் அருந்துவதற்காக ராஜகோபாலை அழைத்துச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிக்க வேண்டும் எனக் கூறிய ராஜகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இந்த நிலையில், ராஜகோபாலை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ், முதல்நிலை காவலா் ராஜதுரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

இணையதள டெண்டர் விவகாரம்: 2 பேர் பணியிடை நீக்கம்!

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்

சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



