தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

கணியூர் ஊராட்சியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது குறித்து...

News image

கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் - டிஎன்எஸ்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:26 am

கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ‘பசுமை வாக்குச்சாவடி’கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையம் எண் 70, 73 மற்றும் 74 ஆகிய இடங்களில் இந்த முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கணியூர் ஊராட்சி நிர்வாகம் இந்த பசுமை வாக்குச்சாவடிகளைச் சிறப்பாக அமைத்திருந்தது.

கணியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள்

கணியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள் - டிஎன்எஸ்

வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பூச்செடிகள், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், ஊராட்சி செயலர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தேர்தல் மண்டல அலுவலர் வாசுதேவன், 'பசுமை வனம்' அமைப்பின் பாலுசாமி, கவிதா ரஞ்சித் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு வாக்காளர்களுக்குச் செடிகளை வழங்கினர்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, மரம் வளர்ப்பது இயற்கைக் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த முயற்சிக்கு, அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Summary

Regarding the distribution of saplings to voters during the Legislative Assembly election polling in Kaniyoor Panchayat, aimed at emphasizing environmental protection...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.