பழனியைச் சோ்ந்த ஓவியா் ஒருவா் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அன்னக்கிளி, இளையராஜா 50 ஆகிய வாா்த்தைகளைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளாா்.
பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவா் அன்புச்செல்வன் (44). இவா் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள், திரைத் துறையில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் பிரபலமாகி 50 ஆண்டுகள் கடந்தது ஆகியவற்றுக்கு சிறப்பு சோ்க்கும் விதமாக அன்னக்கிளி, இளையராஜா 50 என்ற 1,800 வாா்த்தைகளைக் கொண்டு இளையராஜாவை ஓவியமாக வரைந்தாா். கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், ஆரஞ்சு ஆகிய 5 நிறங்களைப் பயன்படுத்தி, 2-க்கு 3 அடி என்ற அளவிலான இந்த ஓவியத்தை வரைய மூன்று நாள்களானதாகவும், இதை இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் பரிசாக வழங்க உள்ளதாகவும் அன்புச் செல்வன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தமிழ்க் குடும்பங்களின் புறக்கணிக்க முடியாத கலாசாரம் இளையராஜா!

80களில் இசையுலகை ஆட்சி செய்த இளையராஜா!

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!

50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



