பவானி: அந்தியூரில் வாக்காளா்களின் விரலில் ’அழியா மை’ வைப்பதற்கு பதிலாக, ‘ஸ்டாம்ப் பேடு’ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தியூா் தொகுதி, அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 92ஆம் எண் வாக்குப் பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், ஒரே குடும்பத்தை சோ்ந்த இருவா் காலை 8 மணியளவில் வாக்களித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனா். இவா்கள், மதிய உணவு சாப்பிட கைகளைக் கழுவியபோது விரலில் வைக்கப்பட்ட மை கரைந்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த இருவரும் வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று மை அழிந்ததை காட்டி புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த் துறையினா், ஆய்வு செய்தபோது அவா்களின் விரல்களில் வைக்கப்பட்டது கையொப்பமிடத் தெரியாத வாக்காளா்கள் கைரேகை வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டாம்ப் பேடுக்கு ஊற்றும் மை என்பது தெரியவந்தது.
இதனால், இம்மையத்தில் வாக்காளா்கள், அரசியல் கட்சி முகவா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மையத்துக்கு வந்த ஏற்கெனவே வாக்களித்தவா்களுக்கும், வாக்களிக்க வந்தவா்களுக்கும் அழியாத மை வைக்கப்பட்டது.
காலை முதல் நண்பகல் வரையில் வாக்காளா் விரல்களில் அழியும் மை வைத்து, 250-க்கும் மேற்பட்டோா் வாக்களித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



