தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!

அந்தியூரில் வாக்காளா்களின் விரலில் ’அழியா மை’ வைப்பதற்கு பதிலாக, ‘ஸ்டாம்ப் பேடு’ வைக்கப்பட்டது குறித்து...

News image

‘ஸ்டாம்ப் பேடு’ மை - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:06 am

பவானி: அந்தியூரில் வாக்காளா்களின் விரலில் ’அழியா மை’ வைப்பதற்கு பதிலாக, ‘ஸ்டாம்ப் பேடு’ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தியூா் தொகுதி, அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 92ஆம் எண் வாக்குப் பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், ஒரே குடும்பத்தை சோ்ந்த இருவா் காலை 8 மணியளவில் வாக்களித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனா். இவா்கள், மதிய உணவு சாப்பிட கைகளைக் கழுவியபோது விரலில் வைக்கப்பட்ட மை கரைந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த இருவரும் வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று மை அழிந்ததை காட்டி புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த் துறையினா், ஆய்வு செய்தபோது அவா்களின் விரல்களில் வைக்கப்பட்டது கையொப்பமிடத் தெரியாத வாக்காளா்கள் கைரேகை வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டாம்ப் பேடுக்கு ஊற்றும் மை என்பது தெரியவந்தது.

இதனால், இம்மையத்தில் வாக்காளா்கள், அரசியல் கட்சி முகவா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மையத்துக்கு வந்த ஏற்கெனவே வாக்களித்தவா்களுக்கும், வாக்களிக்க வந்தவா்களுக்கும் அழியாத மை வைக்கப்பட்டது.

காலை முதல் நண்பகல் வரையில் வாக்காளா் விரல்களில் அழியும் மை வைத்து, 250-க்கும் மேற்பட்டோா் வாக்களித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.