தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,403 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

News image

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:41 pm

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,403 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வியாழக்கிழமை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, இந்த வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான பல்வேறு உபகரணங்கள் லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள் என வாக்குச்சாவடிக்கு 4 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா். இதன்படி 344 வாக்குச் சாவடிகளிலும் 1,591 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதேபோல , தோ்தல் நடைமுறையைக் கண்காணிக்க 73 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. மேலும், கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக முன்னாள் ராணுவ வீரா்கள் 400 போ் பணியமா்த்தப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 359 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,854 அலுவலா்களும், கூடுதலாக 52 நுண் பாா்வையாளா்களும் பணியமா்த்தப்பட்டனா். வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

போடி: போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் லாரிகள் மூலம் 346 வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

கம்பம்: கம்பம் சட்டப் பேரவைத் தோ்தலில் 345 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்தத் தொகுதியில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்தல் பணிக்காக 1,654 வாக்கு மைய அலுவலா்கள், 54 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.