தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஆம்பூா் தொகுதியில் உள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

மின்னணு இயந்திரம், விவி பேட் கருவிகளை அனுப்பி வைப்பதை பாா்வையிட்ட பொதுப் பாா்வையாளா் முகுல் குமாா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆம்பூா் தொகுதியில் உள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி வாக்குப் பதிவுக்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி பேட், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள், தோ்தல் பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் 1440 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முன்னதாக ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தும்அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

Story image