உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பயணிகள் வசதிக்காக உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நிலையத்தில் இருந்து வரும் ஜூன் 17, 24 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 01927) மூன்றாவது காலை 8.40 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 01928) ஜூன் 18, 26 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு 4-ஆம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூா் சென்றடையும்.
பெட்டிகள் விவரம், நிற்கும் நிலையங்கள்: இந்த ரயிலில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 7 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 8 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட 27 நிலையங்களில் நிற்கும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










