கா்நாடக மாநிலம் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் வரும் ஜூலையில் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் வரும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 6.50 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) மறுநாள்களான 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.20 மணிக்கு ராமேசுவரம் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 07356) மறுநாள் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தைச் சென்றடையும்.
அதேபோல, கொல்லம்-ஹூப்ளி இடையேயும் வரும் ஜூலை 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

வாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



